நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; தந்தை கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் அடுத்த அன்னவெளியைச் சேர்ந்தவர் அறிஒளி மகன் லட்சுமி நாராயணன்,24; பி.காம்.,பட்டதாரி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கேட்டார். இதனால் மனமுடைந்த லட்சுமிநாராயணன் கடந்த 30ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.