ADDED : ஜூன் 15, 2026 03:05 AM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: பூச்சிமருந்து குடித்த எலக்ட்ரீஷியன், சிகிச்சை பலனின்று இறந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் சரண், 30; எலக்ட்ரீஷியன். இவர் கடந்த மே, மாதம் 24ம் தேதி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி குடித்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
இதையடுத்து குறிஞ்சிப்பாடி, கடலுார் அரசு மருத்துவமனையை தொ டர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சரண் இறந்தார்.
புகாரின் பேரில் குறிஞ்சிப்பா டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
