sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

த.வெ.க., மகளிர் தின பேரணி அனுமதி மறுப்பால் வாக்குவா

/

த.வெ.க., மகளிர் தின பேரணி அனுமதி மறுப்பால் வாக்குவா

த.வெ.க., மகளிர் தின பேரணி அனுமதி மறுப்பால் வாக்குவா

த.வெ.க., மகளிர் தின பேரணி அனுமதி மறுப்பால் வாக்குவா


ADDED : மார் 09, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.வெ.க., மகளிர் தின பேரணி அனுமதி மறுப்பால் வாக்குவாதம்

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில், த.வெ.க., பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில், நகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் மகளிர் தின விழாவையொட்டி மாவட்ட மகளிரணி செயலாளர் திலகவதி, கீர்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்ற அமைதி பேரணி நடந்தது. பேரணி பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தொடங்கியது. அப்போது பொம்மிடி எஸ்.ஐ., விக்னேஷ் உள்ளிட்ட போலீசார், பேரணிக்கு அனுமதியில்லை எனக்கூறி பேரணியை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன் முன், த.வெ.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் போலீசார் அனுமதி அளித்தனர்.

அங்கிருந்து பொம்மிடி- - சேலம் ரோட்டில் பேரணியாக சென்று, தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோருக்கு இலவச சேலை, உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், அனுமதியின்றி பேரணியாக சென்றதாக, பொ.மல்லாபுரம் வி.ஏ.ஓ., சாமிநாதன் புகார் படி, தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயகாந்த், நிர்வாகிகள் கார்த்திக், செல்வம், 4 பெண்கள் உள்ளிட்ட, 17 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us