/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிரதமர் குறித்து கேலி சித்திரம்பா.ஜ.,வினர் போலீசில் புகார்
/
பிரதமர் குறித்து கேலி சித்திரம்பா.ஜ.,வினர் போலீசில் புகார்
பிரதமர் குறித்து கேலி சித்திரம்பா.ஜ.,வினர் போலீசில் புகார்
பிரதமர் குறித்து கேலி சித்திரம்பா.ஜ.,வினர் போலீசில் புகார்
ADDED : பிப் 19, 2025 01:16 AM
பிரதமர் குறித்து கேலி சித்திரம்பா.ஜ.,வினர் போலீசில் புகார்
பாலக்கோடு:பிரதமர் குறித்து, கேலி சித்திரம் வெளியிட்டதை கண்டித்து, பா.ஜ.,வினர் பாலக்கோடு போலீசில் புகாரளித்தனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில், வார இதழில் கேலி சித்திரம் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க கோரியும், மாநிலம் முழுவதும், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில், பா.ஜ.,வினர் புகார் மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேலி சித்திரம் வெளியிட்டதை கண்டித்து, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பா.ஜ., நகர மண்டல தலைவர் கணேசன் தலைமையிலும், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் மனு அளித்தனர். இதில், ஒன்றிய தலைவர் பசுபதி, மாவட்ட மீனவர் அணி தலைவர் மாதையன், மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கீதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

