ADDED : பிப் 26, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒன்றரை வயது குழந்தை பலி
கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அடுத்த காட்டான்கொட்டாயை சேர்ந்தவர் காளியப்பன். இவரது ஒன்றரை வயது மகன் தர்ஷன். கடந்த, 22ல், குழந்தை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டு முன்புள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். நீரில் மூழ்கிய குழந்தையை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தான். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.