ADDED : பிப் 28, 2025 01:28 AM
அ நிறம் | அளவு
கிராம உதவியாளர்கள்விடுப்பு எடுத்து போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி :பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள, 45 வருவாய் கிராமங்களில், 49 கிராம உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அனைத்து வி.ஏ.ஓ., அலுவலகங்களிலும் கிராம உதவியாளர்கள் இல்லாததால், பணிகள் பாதித்தன.
