ADDED : செப் 02, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை சேர்ந்தவர் டிரைவர் அருள், 43; இவர், கர்நாடக மாநிலம் நெட்டூரில் இருந்து, காங்கேயத்திற்கு லாரியில், கரி லோடு ஏற்றி வந்தார்.
நேற்று காலை, 9:45 மணிக்கு தர்மபுரி மாவட்டம், பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கட்டமேடு அடுத்த, ஆஞ்ச-நேயர் கோவில் வளைவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவருக்கு லேசான காயம்
ஏற்பட்டது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.