ADDED : பிப் 27, 2025 01:56 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
அரூர் எஸ்.ஐ., மதியழகன் மாணவர்களுக்கு போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதன் தீங்குகள் குறித்து விளக்கினார். முதுகலை ஆசிரியர்கள் சக்திவேல், செந்தில் குமரேசன் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை செய்திருந்தார்.
