sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குட்கா கடத்திய ஜீப்பைதுரத்தி பிடித்த போலீஸ்

/

குட்கா கடத்திய ஜீப்பைதுரத்தி பிடித்த போலீஸ்

குட்கா கடத்திய ஜீப்பைதுரத்தி பிடித்த போலீஸ்

குட்கா கடத்திய ஜீப்பைதுரத்தி பிடித்த போலீஸ்


ADDED : ஏப் 04, 2025 01:07 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குட்கா கடத்திய ஜீப்பைதுரத்தி பிடித்த போலீஸ்

காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கர்த்தாரஹள்ளி புதிய சுங்கசாவடி வழியாக, குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் போலீசார் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சுங்கச்சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத ஜீப் ஒன்று, சாலையில் வைத்திருந்த பேரி கார்டுகளை உடைத்துக்கொண்டு, சீறிப்பாய்ந்தது. ஜீப்பை, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் எஸ்.ஐ.,-க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் விரட்டி சென்றனர். இதில், ஜீப் டிரைவர் பாலக்கோட்டில் இருந்து, காரிமங்கலம் செக்போஸ்டை கடந்து, தர்மபுரி நோக்கி சென்றார். அப்போது, விடாது சேசிங் செய்த போலீசார், காரிமங்கலம் அடுத்துள்ள அகரம் பிரிவு சாலையில் ஜீப்பை மடக்கி பிடித்தபோது, அதன் டிரைவர் தப்பினார். ஜீப்பை சோதனை செய்ததில், 2.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 405 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, ஜீப்புடன் குட்காவை பறிமுதல் செய்த, காரிமங்கலம் போலீசார், தப்பி சென்ற டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us