ADDED : ஏப் 09, 2025 01:23 AM
அ நிறம் | அளவு
வணிக கடைகள் ஏலம் அரூரில் ஒத்திவைப்பு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள, 1 முதல், 4 வரையுள்ள வணிக கடைகள், 2025 ஏப்., 1 முதல், 2026 மார்ச்., 31 முடிய உள்ள காலத்திற்கு கடை வைத்து நடத்தி கொள்வதற்கான உரிமம் தொடர்பான ஏலம், நேற்று மதியம், 3:00 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால் வணிக கடைகளுக்கான ஏலம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக, அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
