/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தரமற்ற விதையால் 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு;விவசாயிகள் அதிர்ச்சி
/
தரமற்ற விதையால் 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு;விவசாயிகள் அதிர்ச்சி
தரமற்ற விதையால் 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு;விவசாயிகள் அதிர்ச்சி
தரமற்ற விதையால் 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு;விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : டிச 07, 2024 07:29 AM
அரூர்: அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்-பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 17 ஆயிரத்-துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்-ளனர். இந்நிலையில், பெரியபண்ணை மடுவு கிராமத்தில் நடவு செய்த, 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு (பூட்டை) வந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்-ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:
தீர்த்தமலையில் உள்ள தனியார் உரக்கடையில், கடையின் உரி-மையாளர் அதிகளவில் மகசூல் கிடைக்கும் எனக்கூறி,
கோதா-வரி என்ற நெல் விதையை வழங்கினார். அதனை வாங்கி எங்கள் கிராமத்தை சேர்ந்த பலர், 50க்கும் மேற்பட்ட
ஏக்கரில் நடவு செய்தோம். இந்நிலையில் நடவு செய்த, 35 நாட்களில் நெற்ப-யிரில் பூட்டு (பூட்டை) வந்துள்ளது. அதில்
நெல்மணிகள் எதுவும் வராது. பதராக போய்விடும்.கடை உரிமையாளரிடம் கேட்ட போது, விதை நெல் நிறுவனத்-திடம் தகவல் அளித்துள்ளதாக கூறினார். ஏக்கருக்கு, 35
ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். தரமற்ற விதை நெல்லால் முழு-வதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே,
பாதிக்கப்பட்ட விவசாயி-களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தரமற்ற விதை நெல் விற்-பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.