sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

/

போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஆக 13, 2024 07:39 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், போதை பழக்கத்திற்கு எதிரான, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் நேற்று நடந்தது.

தமிழக முதல்வர் காணொலி காட்சியில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, கல்லுாரி மாணவ, மாண-வியர், அலுவலர்கள் ஏற்றனர். செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சியின் மூலம், சி.இ.ஓ., ஜோதிசந்திரா முன்னிலையில், மாவட்ட கல்வி அலுவ-லர்கள், பள்ளி முதல்வர் உட்பட, 1,350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி-மொழி ஏற்றனர்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிக-ளிலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவ, மாணவியர் நேற்று ஏற்றனர். இதில், எஸ்.பி., மகேஸ்வரன், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களான ஜி.கே.மணி, வெங்கடேஷ்-வரன், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கல்லுாரி முதல்வர் கண்ணன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அர-சுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

* பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், முதல்வர் ரவி தலைமையில், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதி-மொழி ஏற்றனர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி எஸ்.ஐ.,க்கள் ரவிச்-சந்திரன், ராஜேந்திரன், பேராசிரியர்கள் ரமேஷ், அருண் நேரு உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us