sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல்லில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

/

ஒகேனக்கல்லில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஒகேனக்கல்லில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஒகேனக்கல்லில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


ADDED : ஜன 30, 2025 01:34 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்:தை அமாவாசையையொட்டி, ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோரத்தில், நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து மக்கள் வழிபட்டனர்.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால், குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஜதீகம். நேற்று, தை அமாவாசை என்பதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஏராளமனோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பூஜை செய்த பொருட்கள் அனைத்தையும் ஆற்றிலே விட்டு, ஆற்றில் நீராடி அங்குள்ள காவிரியம்மனை வழிபட்டனர்.

* அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் நேற்று ராமர், கவுரி உள்ளிட்ட, 5 தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தீர்த்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதேபோல், டி.அம்மாபேட்டை, இருமத்துார் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில், தை அமாவாசை வழிபாடு நடந்தது.






      Dinamalar
      Follow us