ADDED : பிப் 28, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
பாப்பிரெட்டிப்பட்டி :பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் இருளப்பட்டி ஊராட்சியில் நடந்தது. கடந்த, 21ல் தொடங்கி, நேற்று நிறைவு விழா முதல்வர் ரவி தலைமையில் நடந்தது. திட்ட அலுவலர் அருண் நேரு, சுதா, விவேக் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., மாணவி யாழ்மொழி வரவேற்றார். பேராசிரியர்கள் புருஷோத்தமன், ஐயப்பன், பசுபதி மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோர் திட்டம் தொடர்பான கருத்துரைகள் வழங்கினர். மாணவியர் ஜெயமணி, ஜெயலட்சுமி முகாமில் நடந்த அனுபவங்கள் குறித்து பேசினர். மாணவர் கோபெருஞ்சோழன் நன்றி கூறினார்