ADDED : மார் 08, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலில் குண்டம் விழா
ஈரோடு:ஈரோடு, கோட்டை, பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் மற்றும் விழாவில், முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நேற்று காலை நடந்தது. பூசாரி முதலில் இறங்கி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலமும், இரவில் அம்மன் வீதியுலாவும் நடந்தது.