ADDED : மார் 21, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரியில் ரத்த தான முகாம்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், செட்டிகரையிலுள்ள, அரசினர் பொறியியற் கல்லுாரி, தர்மபுரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட சங்கங்கள் சார்பில், தர்மபுரி அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து, ரத்த தான முகாம் நேற்று பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முகாமை கல்லுாரி முதல்வர் சுமதி துவக்கி வைத்தார். இதில், 153 யூனிட் ரத்தம் தானம் செய்தனர்.