/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
செந்தில் பப்ளிக் பள்ளியில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
செந்தில் பப்ளிக் பள்ளியில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : ஆக 20, 2024 02:46 AM
தர்மபுரி: செந்தில் கல்வி குழுமத்தில், 4ம் ஆண்டு விளையாட்டு விழா கடந்த, 16 அன்று அதியமான் கோட்டையிலுள்ள செந்தில் பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், செந்தில் கல்வி குழுமத்தில் இயங்கும் சேலம் பப் ளிக் பள்ளி, தர்மபுரி மாவட்டம், அதிய மான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி செந்தில் பப்ளிக் பள்ளி மற்றும் செந்தில் மெட்ரிக் பள்ளி ஆகிய, 5 பள்ளிகளும் ஒன்றிணைந்து, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த, 16 அன்று, 4ம் ஆண்டு விளையாட்டு போட்டிகளை நடத்தின.
இதில், செந்தில் கல்வி நிறுவனங் களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் தனசேகர்,தாளாளர் தீப்தி தனசேகர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., சிந்து, தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி கொடி யேற்றி போட்டியை துவக்கி வைத்தனர். மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டெறிதல், ஈட்டி எறிதல் என, பல்வேறு தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல் வர்கள் செந்தில் முருகன், மனோகரன், சிவராமகிருஷ்ணன், வெங்கடா அழகிரி, வேதகுமார் உட்பட துணை முதல்வர்கள், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

