/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆக்கிரமிப்பில் இருந்த அடிபம்பு பொதுமக்களிடம் ஒப்படைப்பு
/
ஆக்கிரமிப்பில் இருந்த அடிபம்பு பொதுமக்களிடம் ஒப்படைப்பு
ஆக்கிரமிப்பில் இருந்த அடிபம்பு பொதுமக்களிடம் ஒப்படைப்பு
ஆக்கிரமிப்பில் இருந்த அடிபம்பு பொதுமக்களிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 13, 2024 07:39 AM
அரூர்: அரூர் அடுத்த கட்டவடிச்சாம்பட்டியில், அரசு தரிசு புறம்போக்கு நிலத்தில், 15வது நிதி குழு மானியத்தில் அடிபம்பு அமைக்கப்-பட்டது. கடந்த, 6 மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ள-தாக கூறி, மூங்கில் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தி-ருந்தார்.
இதனால் அடி பம்பை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. புகாரையடுத்து, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜ-சேகர் உத்தரவுப்படி, நேற்று தீர்த்தமலை ஆர்.ஐ., சத்தியபிரியா முன்னிலையில், அடிபம்பை சுற்றியிருந்த மூங்கில் தடுப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்-டது.

