/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேறும், சகதியுமாக மாறிய நல்லம்பள்ளி வாரச்சந்தை
/
சேறும், சகதியுமாக மாறிய நல்லம்பள்ளி வாரச்சந்தை
ADDED : ஆக 14, 2024 02:19 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று அதிகாலையில் கூடிய ஆட்டுச்சந்-தையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மற்றும் ஆந்திரா உள்-ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்திருந்தனர். ஆடி மாத தொடக்கத்தில் இருந்து, கோவில் திருவிழாக்கள் நடந்-ததால், கடந்த, 3 வாரங்களாக ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
நேற்று அதிகாலை நல்லம்பள்ளி சுற்றவட்டார பகுதிகளில் கன மழையால், வாரச்சந்தையில் மழை நீர் வெளியேற வழியின்றி, தேங்கி சந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், 600 ஆடுகளுக்கும் குறைவா-கவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஆடுகளின் எடையை பொறுத்து, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்ப-னையாகின. அதன்படி நேற்று, 60 லட்சம் ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.