sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

3 வீடுகளில் 14 பவுன் நகை, ரூ.3.50 லட்சம் திருட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்ய இழுத்தடிப்பு

/

3 வீடுகளில் 14 பவுன் நகை, ரூ.3.50 லட்சம் திருட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்ய இழுத்தடிப்பு

3 வீடுகளில் 14 பவுன் நகை, ரூ.3.50 லட்சம் திருட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்ய இழுத்தடிப்பு

3 வீடுகளில் 14 பவுன் நகை, ரூ.3.50 லட்சம் திருட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்ய இழுத்தடிப்பு


ADDED : ஆக 05, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், தேன்கனிக்கோட்டையில் அடுத்தடுத்து, 3 வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல், 14 பவுன் நகை மற்றும் 3.50 லட்சம் ரூபாயை திருடி சென்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் சந்தன குட உரூஸ் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதனால், தேன்கனிக்கோட்டை நகர பகுதி மக்கள் பங்கேற்றனர். இதை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல், தேன்கனிக்கோட்டை டாலர் காலனி பகுதிக்கு சென்று, அங்கிருந்த பேட்டரி கடை உரிமையாளரான நாவாஸ்கான், 42, என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 11 பவுன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

அதேபோல், ஹனிவேலி தனியார் லே அவுட்டிற்கு சென்ற மர்ம கும்பல், வெங்கடேஷ், 40, என்பவரது வீட்டிற்குள் புகுந்து, 2 பவுன் நகை, 2.25 லட்சம் ரூபாய், 600 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது.

அவரது வீட்டின் அருகே உள்ள தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கார்த்திக், 46, என்பவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், ஒரு பவுன் நகையை திருடியது. அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ரவி, 46, வீட்டிற்குள் புகுந்த கும்பல், நகை மற்றும் பணம் ஏதும் சிக்காததால், வீட்டில் இருந்த உணவுகளை ருசித்து சாப்பிட்டு விட்டு, தட்டுகளை சுத்தம் செய்து வைத்து விட்டு தப்பியது.

தேன்கனிக்கோட்டை நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதால், நகை, பணத்தை பறிகொடுத்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us