sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு

/

வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு

வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு

வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு


ADDED : ஆக 08, 2024 01:51 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தலின்படி, பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடை நின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, மாவட்டம் முழுவதும் நடக்கிறது. தர்மபுரி ஒன்றியம், குப்பூர் பஞ்., உட்பட்ட பலாமரத்துக்கொட்டாய் தொடக்கப்பள்ளி அருகே, செங்கல்சூளையில், வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றுகின்றனர். அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், வீட்டில் இருப்பதாக, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளாவிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் ரவிக்குமார் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜன், தர்மபுரி ஒன்றிய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன், ஆசிரியர் பயிற்றுனர்கள் அருண்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் அடங்கிய குழுவினர், செங்கல் சூளை பகுதிக்கு நேரில் கள ஆய்வு செய்தனர். அப்போது, செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர்கள், பீஹார் மாநிலம் கயா மற்றும் நவாடா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், இவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என தெரிந்தது. அவர்களுக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்ததால், ஆசிரியர் இம்ரான், அவர்களுடன் பேசினார். அப்போது அரசின் பல்வேறு திட்டங்களை தொழிலாளர்களுக்கு விளக்கி, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினார்.

இதையடுத்து, வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள், 5 பேர் முதல் வகுப்பிலும், 3 பேர், 2ம் வகுப்பிலும், இருவர் மூன்று மற்றும் 5ம் வகுப்பிலும் என, பலாமரத்துக்கொட்டாய் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us