/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய நுாலகர் தின பேச்சுப்போட்டி
/
தேசிய நுாலகர் தின பேச்சுப்போட்டி
ADDED : ஆக 15, 2024 01:21 AM
பாப்பிரெட்டிப்பட்டி, -
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், தேசிய நுாலகர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு 'கல்வி என்பது சொல் அல்ல, ஆயுதம்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி கல்லுாரி முதல்வர் ரவி தலைமையில் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நடுவர்களாக பேராசிரியர்கள் செந்தில்குமார், ரமேஷ் அருண்நேரு செயல்பட்டனர்.
இளங்கலை தமிழ் முதலாமாண்டு மாணவி சீதா முதல் பரிசையும், 2ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் அதிரூபன், 2ம் பரிசையும், 3ம் ஆண்டு கணிதவியல் மாணவி இனிய கவி, தமிழ் துறை, 2ம் ஆண்டு மாணவர் சஞ்சய் ஆகியோர், 3ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவருக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நுாலகர் கல்யாணி செய்திருந்தார்.