sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புதிய நுாலக கட்டட பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

/

புதிய நுாலக கட்டட பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

புதிய நுாலக கட்டட பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

புதிய நுாலக கட்டட பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 07, 2024 05:49 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வர்ண-தீர்த்தத்தில் 2023 ஜூன், 22ல் அரூர் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சம்பத்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நுாலக கட்டடம் கட்டுவதற்கு, பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இது குறித்து பொதுமக்ள் கூறியதாவது: நுாலக கட்டடத்தின் மேற்பகுதி சேதமடைந்ததால், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், திரு.வி.க., நகரில் உள்ள தனியார் வாடகை கட்டடத்துக்கு நுாலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது, மாடியில் நுாலகம் இயங்கி வருவதால், வாசகர்கள் அவதியடைகின்றனர். இட நெருக்கடியாக இருப்பதால், புத்தகங்கள் வைத்துக்கொள்ள போதுமானதாக இல்லை. மேலும் வாசகர்கள் அமர்ந்து படிப்ப-தற்கும் இட நெருக்கடியாக உள்ளதுடன், வாகனங்களை நிறுத்த வசதி இல்லை. எனவே நுாலக கட்டடம் கட்டும் பணியை விரை-வாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us