/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் தயாரிப்பு தீவிரம்
/
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் தயாரிப்பு தீவிரம்
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் தயாரிப்பு தீவிரம்
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் தயாரிப்பு தீவிரம்
ADDED : ஆக 19, 2024 12:17 AM
அரூர்: அரூரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வரும், செப்., 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரூர் அடுத்த புழுதியூர் புதன்சந்தை அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்-கப்பட்டுள்ளது. இங்கு, மயில் விநாயகர், அன்னப்பறவை விநா-யகர், சர்ப விநாயகர், பஞ்சமுக விநாயகர், ராஜகணபதி உள்-ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்-ளன. அரை அடி முதல், 10 அடி உயர விநாயகர் சிலைகள் வரை உள்ளன. 100 ரூபாய் முதல், 17,000 ரூபாய் மதிப்பிலான விநா-யகர் சிலைகள் உள்ளன.
இது குறித்து, சிலைகள் தயாரிக்கும் ஸ்தபதி குமரேசன் கூறியதா-வது: அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு களிமண், காகிதம் ஆகியவற்றை கொண்டு நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையில், ஆகம விதிப்படி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படு-கின்றன. ராசாயன பூச்சுகள் ஏதுமின்றி மாசுபடாத வகையில் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. எங்களிடம், 350க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. சிலைகள் தயாரிக்கும் பணியில் கும்ப-கோணம், விழுப்புரம், கடலுார் பகுதியை சேர்ந்த தொழிலா-ளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.