/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
/
சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
சுற்றித்திரியும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 07, 2024 05:51 AM
அரூர் : அரூரில், சாலையில் சுற்றித்
திரியும் கால்நடைகளால், விபத்து அச்சத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், திரு.வி.க.நகர், கச்சேரிமேடு, கோவிந்தசாமி நகர் உட்-பட, பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித்தி-ரிகின்றன. மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதுடன், சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்-துக்கு இடையூறு
ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது. கால்நடைகளை அச்சத்துடனேயே கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் கால்-நடைகள், உணவு பொருட்களுடன் வீசப்படும் பாலித்தீன் பைக-ளையும் தின்று, உடல்நல பாதிப்புக்கு ஆளாகின்றன. எனவே, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரி-மையாளர்களுக்கு அபராதம் விதிக்க, டவுன் பஞ்., நிர்வாகம் நட-வடிக்கை எடுக்க வேண்டும்.