ADDED : ஏப் 03, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
அரூர், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அனுகிரக ஆஞ்சநேயர், வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் கோவிலில், பங்குனி உத்திரவிழா நேற்று முன்தினம் விமர்சையாக நடந்தது
. தொடர்ந்து நேற்று காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேக, அலங்காரம், விக்னேஸ்வர பூஜை நடந்தது. 11:30 மணிக்கு மேல், வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், மஹா தீபாராதனையும் நடந்தது.பின், இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
