நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராட்சத குழாய்கள் அமைத்து பம்ப்பிங் மூலம், ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்துவதன் மூலம், 56 பஞ்.,களில் உள்ள, 8,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னையும் தீருவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
இத்திட்டத்தை செயல்படுத்த கோரி, கடந்த, 20 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த, 2019ல் மொபைல்போன் டவர் மீது விவசாயி ஒருவர் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட பின், இக்கோரிக்கை மேலும் தீவிரமடைந்தது.