/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
3 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
/
3 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
ADDED : ஆக 27, 2024 02:32 AM
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 21:30 மணிக்கு தர்மபுரி -- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சா-லையில் காரிமங்கலம் அடுத்த, கும்பாரஹள்ளியில் சேலம் சரக டி.எஸ்.பி., விஜயகுமார், கிருஷ்ணகிரி எஸ்.ஐ., பெருமாள், தர்ம-புரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அசோக் லைலேண்ட் தோஸ்த் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, வாகனத்தில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்துாரை சேர்ந்த மல்லேஷ், 21, ராஜ்குமார், 39, தர்மபுரி மாவட்டம், ஆலமரத்துப்-பட்டி மாரியப்பன், 53, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.