/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி சாலை விரிவாக்க பணிகள் ஆய்வு
/
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி சாலை விரிவாக்க பணிகள் ஆய்வு
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி சாலை விரிவாக்க பணிகள் ஆய்வு
ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி சாலை விரிவாக்க பணிகள் ஆய்வு
ADDED : ஆக 06, 2024 02:17 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணியை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல், சேலம் அயோத்தியாப்பட்டணம் வரை, 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக வாணியம்பாடி முதல், தர்மபுரி மாவட்டம் அரூர் -- ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடக்கிறது. இவ்வழியாக தினமும், 1,000க்கும் மேற்பட்ட பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதையடுத்து ஏ.பள்ளிப்பட்டி முதல், மஞ்சவாடி கணவாய் வரை சாலையை விரிவுபடுத்தி, 4 வழிச்சாலை அமைக்க, மத்திய அரசு, 170 கோடி ரூபாய் ஒதுக்கியது. சாலை அமைக்கும் பணி கடந்த, 6 மாதங்களாக நடக்கிறது. அதற்காக சாலையில், 53 கல்வெட்டுகளும், ஒரு பாலம் அமைத்தும், சாலை அகலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இப்பணியை பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில், நேற்று நெடுஞ்சாலை துறை சேலம் கோட்ட உதவி பொறியாளர் சரண்யா ஆய்வு செய்தார். அப்போது தார்ச்சாலை அமைக்கும் பணி தரமாக உள்ளதா, சரியான அளவு போட படுகிறதா என, சாலையில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, சேலம் அரசு பொறியியல் கல்லுாரியை சேர்ந்த, 11 மாணவ, மாணவியர் பயிற்சி மேற்கொண்டனர். அவர்களுக்கு சாலை அமைக்கும் முறை, அதை பரிசோதிக்கும் முறை உள்ளிட்டவைகள் குறித்து, உதவி பொறியாளர் சரண்யா விளக்கினார்.