ADDED : ஆக 18, 2024 03:38 AM
தர்மபுரி: பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள், கலை
பொருட்கள் மற்றும் வரலாறு குறித்த கண்காட்சி தர்மபுரியில் நடக்கிறது.
தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில், தனியாருக்கு சொந்தமான வின்சென்ட் திருமண மண்டபத்தில், பழங்கால நாணய கண்-காட்சி கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது. இதில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை நாணயங்கள் அமைப்பின் தலைவர் சென்னை மணிகண்டன் கூறுகையில், ''இதுபோன்ற நாணய கண்-காட்சி மாணவ சமூகத்திற்கு பெருமளவில் பயன்படக்கூடியது. மேலும், அறிவை மேம்படுத்த, ஒப்பிட்டு பார்க்கும் பண்பை வளர்க்க, வரலாற்றோடு இணைந்து கொள்ளுதல், நினைவு கூறும் தன்மையை பெருக்குதல் உள்ளிட்டவை நாணயம் சேகரிப்பின், மூலம் கிடைக்கும். இதில், மறைந்த முன்னாள், 'தினமலர்' ஆசி-ரியரான கிருஷ்ணமூர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்ட, சங்ககால பாண்டிய மன்னன் பெருவழுதி நாணயம், காட்சி படுத்தப்பட்-டுள்ளது. இக்கண்காட்சி, தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறை-யாக, முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. கடந்த, 2 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், இன்றிரவு, 7:00 மணி வரை நடக்கிறது. இதை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் இதை பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.

