/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் ஜெயம் வித்யாலயா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம்
/
அரூர் ஜெயம் வித்யாலயா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம்
அரூர் ஜெயம் வித்யாலயா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம்
அரூர் ஜெயம் வித்யாலயா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம்
ADDED : மே 07, 2024 10:12 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே எச்.தொட்டம்பட்டியிலுள்ள ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2023--2024ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.
தேர்வு எழுதிய 319 மாணவர்களும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சமநெறி தமிழில்,- 99, ஆங்கிலம், 95, இயற்பியல், -100, வேதியியல், 99, உயிரியல், 99, கணிதம், - 99, என மொத்தம், 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி சந்தியா, 590 மதிப்பெண்கள் பெற்று, 2ம் இடமும், மாணவி தானேஸ்வரி, 586 மதிப்பெண்களுடன், 3ம் இடமும் பிடித்துள்ளனர்.
பாடவாரியாக கணிதத்தில், 14 பேரும், கணினி அறிவியல், 12, இயற்பியல், -4, வேதியியல், 3 பேரும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 590 மதிப்பெண்களுக்கு மேல், 2 பேர், 580க்கு மேல் 10, 570க்கு மேல், 23 பேர், 550க்கு மேல், 60 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 178 பேரும் பெற்றுள்ளனர். முதல், 3 இடங்களை பெற்ற மாணவயருக்கு, பள்ளி பொருளாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் முருகேசன், மேலாளர் கிருஷ்ணன், இயக்குனர் தமிழ்வாணன் மற்றும் பள்ளி நிர்வாக இயக்குனர்கள், முதல்வர் சிலம்பரசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்தினர்.இப்பள்ளியில் படித்து, கடந்த, 9 ஆண்டுகளில் இதுவரை, 140 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.