/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2.81 கோடிக்கு ஏலம்
/
பட்டுக்கூடு அங்காடியில் ரூ.2.81 கோடிக்கு ஏலம்
ADDED : ஆக 04, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், 2.81 கோடி ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் ஏலம் நடந்தது.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், கடந்த ஜூலை மாதத்தில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடு-களை, விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நி-லையில், 981 விவசாயிகள், 1,801 குவியல்களாக, 66,922 கிலோ வெண்பட்டு கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 206 முதல், 555 ரூபாய் வரை சராசரியாக, 420 ரூபாய்க்கு ஏலம் போனது.
இதன் மொத்த மதிப்பு, 2,81,19,556 ரூபாய். கடந்த ஒரு மாதத்தில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 4,21,762 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்
துள்ளது.