sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கடும் வறட்சியால் வரத்து சரிவு: தர்பூசணி விலையில் உயர்வு

/

கடும் வறட்சியால் வரத்து சரிவு: தர்பூசணி விலையில் உயர்வு

கடும் வறட்சியால் வரத்து சரிவு: தர்பூசணி விலையில் உயர்வு

கடும் வறட்சியால் வரத்து சரிவு: தர்பூசணி விலையில் உயர்வு


ADDED : ஏப் 28, 2024 03:59 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், வரத்து சரிவால் தர்பூசணி பழத்தின் விலை உயர்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே, 37.7 டிகிரி செல்ஷியல் அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், காலை, 10:00 மணிக்கு மேல் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்கும் வகையில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் தர்பூசணி, முலாம் பழம் போன்ற குளிர்ச்சியான பழ வகைகள் மற்றும் கரும்பு ஜூஸ் ஆகியவற்றை சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து, வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். டூவீலர்களில் செல்வோர், இந்த கடைகளில் பழங்களை வாங்கி சாப்பிட்டு சூட்டை தணிக்கின்றனர். இந்நிலையில் தர்பூசணி வரத்து சரிவால், அதன் விலை உயர்ந்துள்ளதுடன், அரூரில் தர்பூசணி பழத்திற்கு தட்டுப்பாடு

ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பழ வியாபாரி வெங்கடேசன் கூறியதாவது: சீசன் துவக்கத்தில் மொரப்பூர், கம்பைநல்லுார், அனுமன்தீர்த்தம் பகுதியில் இருந்து விவசாயிகளிடமிருந்து, தர்பூசணியை மொத்தமாக வாங்கி வந்து, கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். கடந்த, 10 நாட்களுக்கு முன், அதன் விலை அதிகரித்து, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது நிலவும் கடும் வறட்சியால், அரூர் சுற்று வட்டாரத்தில் தர்பூசணி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தர்பூசணி அதிகமாக விளையும் திண்டிவனம், மேல்மருவத்துார் பகுதியிலும் போதிய விளைச்சல் இல்லாததால், தர்பூசணிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அதன் விலையும் அதிகரித்து கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இருந்தபோதிலும், போதிளவில் தர்பூசணி பழம் கிடைக்கவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us