sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பயிர் காப்பீடு தொகை வழங்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை

/

பயிர் காப்பீடு தொகை வழங்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை

பயிர் காப்பீடு தொகை வழங்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை

பயிர் காப்பீடு தொகை வழங்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை


ADDED : செப் 15, 2024 01:01 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், செப். 15-

தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நடப்பாண்டு, 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்துள்ளனர். கடந்தாண்டு போதிய மழை பெய்யாததால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டு கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் கரும்புகள் காய்ந்து வருகிறது. எனவே, பயிர் காப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கரும்பு சாகுபடி செய்துள்ள பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். வறட்சியால் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர்கள் காய்ந்து விட்டன. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்வதற்கு, 40,000 ரூபாய் செலவாகிறது. வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, பயிர் காப்பீடு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு, 45,000 ரூபாய் அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், 10 ஆண்டுகளாக வெள்ளப் பெருக்கு, வறட்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை காப்பீடு தொகை வழங்கவில்லை. எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் குறித்து வேளாண் துறை, புள்ளியியல் மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி, காப்பீடு தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us