/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 10:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில், தர்மபுரி ஊரக வளர்ச்சி அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முகமது இலியாஸ், தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் பேசினார். மாவட்ட செயலாளர் தர்மன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், தமிழக அரசு கலைஞர் கனவு இல்ல திட்டம் மற்றும் ஊரக வீடுகளை பழுதுபார்த்தல் திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பயனாளர்கள் தேர்வு குறித்து, திருத்தப்பட்ட வழி நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும். பயனாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்த உரிய கால அவகாசம் வழங்க வலியுறுத்தினர்.