/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி நகர்மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் வெளிநடப்பு
/
தர்மபுரி நகர்மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் வெளிநடப்பு
தர்மபுரி நகர்மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் வெளிநடப்பு
தர்மபுரி நகர்மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் வெளிநடப்பு
ADDED : ஆக 30, 2024 05:07 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியிலுள்ள மொத்தம், 33 வார்டுகளில், 20 வார்-டுகளில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், 13 வார்டுகளில், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களும் கவுன்சிலர்க-ளாக உள்ளனர். நகராட்சி சேர்மனாக, தி.மு.க.,வை சேர்ந்த லட்சு-மியும், அதே கட்சியை சேர்ந்த நித்யா துணை சேர்மனாகவும் உள்ளனர்.
துணை சேர்மன் நித்யாவிற்கு, நகரமன்ற கூட்டத்தில், உரிய இருக்கை வழங்காமல், மற்ற கவுன்சிலர்கள் இருக்கைகளை தாண்டி, கடைசியில் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டா-கவே கூறப்பட்டு வந்தது. நேற்று, தர்மபுரி நகராட்சி அலுவல-கத்தில், நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வந்த துணை சேர்மன் நித்யா, கூட்டத்தை விட்டு உடனடியாக வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர், ''நக-ராட்சி கூட்டத்தில், துணை சேர்மன் என்ற வகையில், எனக்கு முறையான மரியாதை கொடுப்பதில்லை. மேலும், கவுன்சிலர்-களை தாண்டி, தனியாக ஒதுக்கிய இடத்தில் நான் அமர வேண்டி உள்ளது. இதனால், வேறு வழியின்றி சேர்மன் நடவடிக்கையை கண்டித்து, நான் வெளிநடப்பு செய்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

