/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரீப் பருவத்திற்கு உரங்கள் தயார் வேளாண் இணை இயக்குனர் தகவல்
/
காரீப் பருவத்திற்கு உரங்கள் தயார் வேளாண் இணை இயக்குனர் தகவல்
காரீப் பருவத்திற்கு உரங்கள் தயார் வேளாண் இணை இயக்குனர் தகவல்
காரீப் பருவத்திற்கு உரங்கள் தயார் வேளாண் இணை இயக்குனர் தகவல்
ADDED : ஜூலை 01, 2024 04:09 AM
கிருஷ்ணகிரி: காரீப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தயார் நிலையில் உள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காரீப் பருவத்தில், நெல், சிறுதானியம், பயறு, எண்ணை வித்து, பருத்தி மற்றும் கரும்பு ஆகியவை, 3.53 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இதற்கு தேவையான உரங்கள், யூரியா, 4,538 டன், டி.ஏ.பி., 2,380, பொட்டாஷ், 562, காம்பளக்ஸ், 8,271 மற்றும் சூப்பர் பாஸ்பேட், 366 என மொத்தம், 16,137 டன் உரங்கள் தயார் நிலையில் உள்ளன. அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. ஒரு நபருக்கு அதிகளவில் உரங்களை விற்பனை செய்யவோ, பிற மாநில மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு எக்காரணம் கொண்டும் உரங்கள் வழங்கவோ, அண்டைய மாவட்டங்களில் இருந்து உரங்களை வாங்கி வரவோ கூடாது.
மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை, கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம், 82480 96799, பர்கூர், 98426 03370, வேப்பனஹள்ளி, 96267 61735, மத்துார், 63813 37348, ஊத்தங்கரை, 82487 49452, சூளகிரி மற்றும் கெலமங்கலம், 94432 07504, ஓசூர், 96261 77886, தளி, 85268 09678 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.