/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் மீது வழக்குப்பதிவு
/
ஆடு மேய்ந்த தகராறு: 4 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மே 02, 2024 07:44 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனுார் கிராமம், வாவிக்காடு பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி, 63. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் தம்பி முத்துசாமி, 60, என்பவருக்கும், 8 ஆண்டுகளாக நிலப்பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த, 28 காலை, 9:00 மணிக்கு, முத்துசாமியின் வளர்ப்பு ஆடுகள், அர்த்தனாரியின் காட்டிற்கு மேய்ச்சலுக்கு சென்றன. இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
சண்டையை விலக்க வந்த அர்த்தனாரி மனைவி பாப்பாத்தி, 53, முத்துசாமி மனைவி பிரேம்குமாரி, 52, ஆகிய இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். நான்கு பேரும் காயமடைந்தனர்.
இதில், அர்த்தனாரி தரப்பினர், நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், முத்துசாமி தரப்பினர், ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எலச்சிபாளையம் போலீசார், நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

