/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தென்மேற்கு பருவமழையால் நிலக்கடலை சாகுபடி தீவிரம்
/
தென்மேற்கு பருவமழையால் நிலக்கடலை சாகுபடி தீவிரம்
ADDED : ஜூன் 30, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தென்மேற்கு பருவ மழையால், விவசாயிகள் நிழக்கடலை சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் விவசாயிகள் நெல், கேழ்வரகு, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக நிலக்கடலையை விதைத்துள்ள நிலையில், பருவமழையால் நிலக்கடலை பயிர் செழித்து வளர்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விளைச்சல் தரமாகவும், நல்ல விலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள்
உள்ளனர்.