/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பஞ்., ஆபீசில் இரவில் அரை கம்பத்தில் தேசியக்கொடி
/
பஞ்., ஆபீசில் இரவில் அரை கம்பத்தில் தேசியக்கொடி
ADDED : ஆக 16, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
மாலை, 6:00 மணியளவில் கொடியை இறக்க வேண்டும். ஆனால் மாலை, 6:20 மணி வரை இறக்கப்படாமல் இருந்தது. பின் தேசியக்கொடியை இறக்கி பஞ்., நிர்வாகம், அரை கம்பத்தில் கட்டியது. இரவு, 8:30 வரை இறக்கப்படாததால், தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதாக மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

