sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண் சிசுக்கள் கருக்கலைப்பு தர்மபுரி அருகே நர்ஸ் கைது

/

பெண் சிசுக்கள் கருக்கலைப்பு தர்மபுரி அருகே நர்ஸ் கைது

பெண் சிசுக்கள் கருக்கலைப்பு தர்மபுரி அருகே நர்ஸ் கைது

பெண் சிசுக்கள் கருக்கலைப்பு தர்மபுரி அருகே நர்ஸ் கைது


ADDED : ஆக 24, 2024 01:52 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே, கிட்டனஹள்ளியில் கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்யப்படுவதாக, தர்மபுரி கலெக்டர் சாந்திக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான குழுவினர், கிட்டனஹள்ளி பகுதியில் ஒரு வீட்டில் நுழைந்தனர். அங்கு இருந்த கர்ப்பிணியை விசாரித்தனர்.

அவருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், வயிற்றில் உள்ள சிசுவும் பெண் என தெரிந்ததால், கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிந்தது.

இதையடுத்து, அவருக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற, சேலம் மாவட்டம், பனமரத்துபட்டியைச் சேர்ந்த சித்ராதேவி, 42, என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சேலத்தில், ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் செவிலியராக பணிபுரிவது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us