sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு

/

புகையிலை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு

புகையிலை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு

புகையிலை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு


ADDED : ஆக 17, 2024 04:29 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா, மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், மொரப்பூரில் பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி சாலை, சிந்தல்பாடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகள், ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பீடா கடையுடன் இணைந்த பழக்கடை மற்றும் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, 2 கடை உரிமையாளர்களுக்கும் தலா, 25,000 ரூபாய் வீதம் மொத்தம், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 15 நாட்களுக்கு கடையை திறக்க கூடாது என, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட, 2 குளிர்பான கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us