/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு
/
புகையிலை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு
புகையிலை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு
புகையிலை விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு
ADDED : ஆக 17, 2024 04:29 AM
மொரப்பூர்: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா, மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், மொரப்பூரில் பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி சாலை, சிந்தல்பாடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகள், ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பீடா கடையுடன் இணைந்த பழக்கடை மற்றும் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, 2 கடை உரிமையாளர்களுக்கும் தலா, 25,000 ரூபாய் வீதம் மொத்தம், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 15 நாட்களுக்கு கடையை திறக்க கூடாது என, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட, 2 குளிர்பான கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.