/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பஞ்., நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
/
பஞ்., நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
ADDED : ஆக 03, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட அண்ணல்நகரில், மின்மோட்டார் பழுதால் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, அண்ணல் நகர் பஸ் நிறுத்தத்தில் அதேபகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் நேற்று காலை, 8:15 மணிக்கு காலிக்குடங்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் ஊர்ப்பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.