ADDED : ஆக 20, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்றும் மதியம், 1:30 முதல் அரூர், கடத்துார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், சித்தேரி மலையில் உள்ள அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.