/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் தர்ணா போராட்டம்
/
பெண் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் தர்ணா போராட்டம்
பெண் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் தர்ணா போராட்டம்
பெண் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் தர்ணா போராட்டம்
ADDED : ஆக 04, 2024 01:48 AM
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம், பேகராஹள்ளி பஞ்., உட்பட்ட சவுளுரை சேர்ந்த பழனிவேலு என்பவரின் மகள் ஆனந்தி, 26; இவருக்கும் புலிக்கரை பஞ்., சென்னியம்பட்டியை சேர்ந்த பொக்லைன் ஆப்பரேட்டர் கனகராஜ், 32 என்பவருக்கும் கடந்த, 2016ல் திருமணமானது. தம்பதியருக்கு, 5 மற்றும் 3 வயதில் மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே, தோட்டத்திலுள்ள மரத்தில் ஆனந்தி துாக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மதிகோன்பாளையம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
ஆனந்தி சாவில் மர்மம் உள்ளதாக கூறி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் நேற்று, சடலத்தை வாங்க மறுத்து, உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின், கொலையாளிகளை கைது செய்வதாக உறுதியளித்த பின் உறவினர்கள், ஆனந்தியின் சடலத்தை பெற்றுச் சென்றனர்.