/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
ADDED : ஆக 24, 2024 01:28 AM
தர்மபுரி, ஆக. 24-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற, போதுமான ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு, விடுபட்ட உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு, தனி ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்த தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் நிலையில் உள்ளவர்களுக்கு, பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட, அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இணை இயக்குனர் பணியிடங்களில், ஆட்சிப்பணி அலுவலர்கள் நிலையில் மேற்கொள்ளும் பணி நியமனங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, 20 -அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.

