ADDED : செப் 02, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சா-லையில், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு தர்மபுரி டவுன் எஸ்.ஐ., ரங்கசாமி ரோந்து சென்றார். அப்போது, சவுளுபட்டி மேம்பாலம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டாடா இண்டிகா காரை சோதனை செய்தார்.
அதில், புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதையடுத்து, மூட்டை-களில் இருந்த, 66,300 மதிப்புள்ள, 115 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த நபர் குறித்து, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.