ADDED : செப் 01, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: சனி மஹா பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் மற்றும் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பல்வேறு திரவிய
பொருட்களால் அபி-ஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூவேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வர்ணீஸ்வரர் கோவிலில், சனி மஹா பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.