/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்
/
சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்
ADDED : செப் 15, 2024 02:03 AM
தர்மபுரி: மா.கம்யூ., கட்சியின், அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு, தர்மபுரியில் இரங்கல் கூட்டம், ஊர்வலம் நடந்தது.
தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த இரங்கல் கூட்டத்துக்கு, மா.கம்யூ., மாவட்ட செயலர் குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் டில்லி-பாபு, சிசுபாலன், கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செய-லாளர் ஆதவன்தீட்சண்யா, காங்., மாவட்ட தலைவர் தீர்த்த-ராமன், தி.மு.க., நகர செயலர் நாட்டான்மாது, இ.கம்யூ., கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராசன் உள்பட பலர் பங்-கேற்றனர். பின், அனைவரும் இரங்கல் உரை நிகழ்த்தினர், முன்-னதாக, செங்கொடிபுரத்தில் துவங்கிய இரங்கல் கூட்ட ஊர்வலம் ராஜகோபால் பூங்கா வழியாக சென்று, பிறகு அதே இடத்துக்கு வந்தடைந்தது.