/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சனி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை
/
சனி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை
ADDED : ஆக 18, 2024 03:40 AM
தர்மபுரி: சனி பிரதோஷத்தையொட்டி, தர்மபுரியிலுள்ள சிவன் கோவில்-களில் நந்திக்கு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
சனி மாஹா பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் மற்றும் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பால், பன்னீர், தேன், சந்தனம், குங்-குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் தொடர்ந்து அலங்காரம் நடந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்-தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூவேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில், சனி மஹா
பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
அரூரில்...
அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆரா-தனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்-ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடந்தன. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்-சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்-பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்-தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.